PaidVerts

Saturday, 23 August 2014

மெயில Signout பண்ண மறந்துட்டீங்களா?

கவலைய விடுங்க

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் என்பது அத்தியாவசிய தேவையாகி விட்டது என்று சொல்லலாம்.
ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருவதால் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சில நேரங்களில் அவசர தேவைகளுக்காக பிறரது கணனி மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்துகிறோம்.
பிறகு அவசரத்தில் கணக்கை முழுவதும் முறைப்படி signout செய்யாமல் விட்டுவிடுவோம். இதனால் மற்றவர்கள் நமது கணக்கை எளிதாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
சிலரின் கணக்குகளில் 10,000க்கும் அதிகமான மெயில்கள் இருக்கும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஏனெனில் அவர்கள் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் விசிட் செய்பவராக இருக்கலாம். அவர் எத்தகைய முக்கியமான தகவல்களையும் அதனுள் வைத்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் தினமும் தங்கள் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு இது இந்த செயல் ஆபத்தான ஒன்றாக இருக்கும்.
முறைப்படி signout செய்யாமல் பிறகு "அய்யோ இப்படி மறந்து வந்துட்டேனே" என வேறு இடத்தில் இருந்து தூக்கம் தொலைப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
இப்படிபட்டவர்களுக்கு தான் gmail தனது சிறந்த சேவையை வழங்கியுள்ளது. எந்த இடத்தில் நீங்கள் உங்கள் கணக்கை முறைப்படி மூடா விட்டாலும், வீட்டில் இருந்தபடியே அந்த கணக்கை எளிதாக மூடி விடலாம்.
என்ன செய்ய வேண்டும்?
முதலில் உங்கள் Gmail கணக்கை Login பண்ண வேண்டும்.

 1)  மேற்புறம் வலது பக்கத்தில் உங்கள் ஜிமெயில் கணக்கின் புகைபடத்தை கிளிக் செய்யவும், அதில் அக்கௌன்ட் என்பதை கிளிக் செய்யவும்,





2) பின்பு தோன்றும் பக்கத்தில் செக்யூரிட்டி சேவையை கிளிக் செய்யவும்,


3) அதன் பின்பு செக்யூரிட்டி பக்கத்தில்-> ரிசென்ட் அக்டிவிட்டியில் -> வியுவ் ஆல் ஈவென்ட்ஸ்யை கிளிக் செய்யவும்,



4) இப்போது சரி பார்த்தக் கொள்க :)


உங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா?

இதோ மீட்க வழி!!!







தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள்.
இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ். வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.
வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம்.
ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணனியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.
உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணனியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.


Wednesday, 11 June 2014

மொபைல் போனின் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க !



இன்றைய இளைய சமுதாயத்தினரின் கைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது மொபைல் போன்.உலகில் எந்த மூலையில் நடக்கும் விடயங்களையும் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம், அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது.
கூடவே அருகில் வைத்து பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் மூலம் பல்வேறு தீமைகளும் இருக்கின்றன என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
1. மொபைல் போனை பயன்படுத்தும்போது பெரும்பாலும் உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும்.
3. மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள நேரத்தில் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.
4. குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும். இயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும்.
5. இரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம்.
6. உங்கள் தேகம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை.
7. குழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது.


தெரிந்து கொள்வோம்: இணையத்தில் ‘Backbone’ பயன்பாடு பற்றி எத்தனை பெயருக்கு தெரியும்?




இணையத்தின் முதுகெலும்பு என அழைக்கப்படும் ‘Backbone’ தகவல் பறிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்போது உள்ள காலகட்டங்கள் அனைத்தும் இணையத்தை மையமாக கொண்டு கடந்து வருகின்றன. இதில் பயன்படுத்தப்படும் தகவல் பறிமாற்றத்தை பற்றி எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா?
மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய வாக்காளர் தொகை, அமெரிக்காவின் மக்கள் தொகையை விட மூன்று மடங்கு பெரியது. இந்த வியக்கும் எண்ணை மிஞ்சும் வித்தை தான் ஒரு நொடிக்கு உலகம் முழுவதும் பறிமாற்றப்படும் தகவல்கள். நம்ப முடியாவிட்டாலும் இது தான் உண்மை.
அதாவது 5 ஆண்டுகளுக்கு முன் நொடிக்கு 30 டெரா பைட்டுகள் என்ற இந்த அளவு கடந்த மாதம் 300 டெரா பைட்டுகளாக அதிகரித்துள்ளது. புரியும் படி சொன்னால் ஒரு டெரா பைட் என்பது கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு நிகரான அளவு இதன் படி பார்த்தால் 30,000 திரைப்படங்கள் பார்ப்பதற்கான தகவல் பறிமாற்றம் ஒவ்வொரு நொடியும் நடந்தபடி உள்ளது.
இந்த தகவல் பறிமாற்றம் ‘backbone’ எனப்படும் இணையத்தின் உள்கட்டமைப்பில் உள்ளது. இந்த இணையத்தின் பின்னெலும்பு பல கடல்களையும், மலைகளையும் தாண்டி, பல நாடுகளில் உள்ள இணைய சேவை நிறுவனங்களை இணைக்கிறது.
இந்த நிறுவனங்கள் ‘router’ மூலமும், பல்வேறு இணைப்பு சாதனங்கள் வழியாகவும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கிறது.
இந்த வலுவான பின்னெலும்பை உருவாக்கி வாடிக்கையாளர்களை கவர ஃபைபர் ஆப்டிக் கேபிள் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் ஐரேப்பாவிலும், கடல் வழியாக இந்தியா உட்பட ஆசிய நாடுகளிலும் தனது நெட்வொர்கை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதே போல் இந்த நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் பிரைவசி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு மட்டுமல்லாமல், பாதுகாப்பாக இத்தகைய தகவல்களை மற்றவர்களிடம் பறிமாறும் பல தொழில்நுட்பம் வந்து விட்டன. இருப்பினும் இவை இணையத்தில் இயங்க உள்கட்டமைப்பும் பின்னெலும்பும் தேவைப்படுகின்றன.
இதற்காக புதுமையான மற்றும் புரட்சிகரமான முயற்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பெயர் (mesh) வலைப்பின்னல் நெட்வொர்க்.


Nixi (national internet exchange of india)- இந்த அமைப்பானது இந்தியாவின் இணைய வசதிக்கு முதுகெலும்பாய் உள்ளது. நமக்கு தேவைப்படும் இணையம் மற்றும் இணையம் சார்ந்த வசதிகளை ISP (Internet service provider) மூலமாக இந்த அமைப்பு நம்மிடம் கொண்டு சேர்க்கிறது.

Wednesday, 5 February 2014

கரப்பான் பூச்சிகளின் மூலம் மின்சாரம்! ஜப்பானில் சாதனை !

கரப்பான் பூச்சிகளை வைத்து ஜப்பான் பல்கலைகழக மாணவர்கள் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளனர்.
கரப்பான் பூச்சிக்கு இரு மீசைகள் இருக்கும், அதாவது இவைகளை உணர் உறுப்புகள்(Antennae) என்று அழைக்கின்றனர்.
இதன் மூலம் முன்புறத்தில் ஏதேனும் தடை உள்ளதாக என அறிந்து கொள்ளும்.
இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள்(cerci) உள்ளன, பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும்.
இதனை கொண்டு ஜப்பானின் ஒசாகா பல்கலைகழகம் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளது.

இந்த சென்சார்களின் மூலம் மிக எளிதாக தகவல்களை பரிமாறி கொள்ள முடியும்.
கரப்பான் பூச்சிகளின் முதுகில் சென்சாரும் அதன் கூட 20mm x 15mm அளவுக்கு ஒரு ஃப்யூள் செல்லும் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஃப்யூள் செல் வேலை செய்ய, கரப்பான் பூச்சியின் உடலில் ட்ரஹலோஸ்(trehalose) என்னும் திரவம் மற்றும் ஒரு சிறிய ஊசியை செலுத்துவார்கள்.
இந்த திரகம் உள்ளே எலக்ட்ரோட்ஸை உருவாக்கும், அதன் மூலம் குளுகோஸ் கிடைக்கும்.
இந்த எலக்ட்ரோட்ஸ் மூலம் ஊசி அனோட் /காத்தோடாக மாறி நிரந்திர மின்சாரம் கிடைக்கும், இது சென்சாரின் உபயோகத்திற்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
இதற்கு முன்பு சோதனை செய்து பார்த்த போது, ஒவ்வொரு கரப்பான் பூச்சியும் 50.2μW மின்சாரத்தை தந்ததாம்.
எப்படியோ, கரப்பான் பூச்சியில இருந்து கரண்ட கண்டுபிடிச்சுடாங்க!...


Tuesday, 17 December 2013

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க !

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.
பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம்.
நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.
பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அந்த விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும்.
அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.
உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும்.
பாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும்.
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இப்பொழுது புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.


Wednesday, 4 December 2013

டெக்ஸ்டாப் கணனிகளில் இப்போது Voice Search !

கூகுள் நிறுவனத்தின் புரட்சிகளுள் குரல்வழி மூலமான இணையத்தேடலும் ஒன்றாகும்.
இவ்வசதியினை தனது பிந்திய இயங்குதள பதிப்பான Kitkat இயங்குளத்தில் இலவசமாக வழங்கியுள்ளது.
கூகுள் குரோமில் மட்டுமே செயற்படும் இவ்வசதியினை தற்போது டெக்ஸ்டாப் கணினிகளுக்கும் தந்துள்ளது.
இதற்காக Google Voice Search Hotword எனும் நீட்சியை குரோம் உலாவியில் நிறுவிக்கொண்டு மைக்ரோபோனினை பயன்படுத்துவதற்குரிய அனுமதியை வழங்க வேண்டும். 


தரவிறக்கச் சுட்டி

உரிமம் : Techlankasri


 

Wednesday, 20 November 2013

ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களின் அளவை ஒரே தடவையில் மாற்றியமைப்பதற்கு !

பல புகைப்படங்களின் அளவினை மாற்றியமைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் சந்தைகளில் காணப்படுகின்றன.
எனினும் இவற்றில் மிகவும் வினைத்திறன் மிக்க மென்பொருட்களில் ஒன்றாக Ivan Image Converter காணப்படுகின்றது.
இந்த மென்பொருளில் 170 இற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை உடைய புகைப்படங்களை கையாள முடிவதுடன், 44 வகையான கோப்புக்களுக்கு மாற்றம் செய்துகொள்ளவும் முடியும்.
மேலும் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதியும், இலகுவான பயனர் இடை முகத்தினையும் இம்மென்பொருள் கொண்டுள்ளது. 

 


Tuesday, 22 October 2013

மனித மூளையை போன்று செயல்படும் கணனி! IBM நிறுவனம் சாதனை !

மனித மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்து IBM நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, மனிதன் இயங்குவதற்கு இன்றியமையாத ஒன்று.
இதனை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்து IBM நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
அதாவது, மனித மூளையை போன்று கணனி ஒருவகை திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன்னை வெப்பம் நீக்கி குளுமைப்படுத்தியும் கொள்ளும்.
மூளையில் உள்ள குருதிச் சுற்றோட்டத்தொகுதி போன்ற ஒன்று, ஒருவகை மின்னணு இரத்தத்தை கணனியின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கணனிக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும்.
சூரிச்சில் உள்ள இந்நிறுவனத்தின் சோதனைக் கூடத்தில் இவ்வாறு செயற்படக்கூடிய கணனியின் செயல்முறை விளக்கத்தை IBM டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் ஆகியோர் வழங்கினர்.
இவர்கள் கூறுகையில், தற்போதுள்ள கணனிகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே தகவல்களை பெறுவதற்கு பயன்படுவதாகவும், இந்த முறை பயன்படுத்தப்பட்டால் சிறப்பான கணனியை தம்மால் உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2060ஆம் ஆண்டளவில் முழுமையடையக் கூடிய இந்த முயற்சியின் மூலம், தற்போதைக்கு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அரைவாசி அளவுக்கு பெரியதாக இருக்ககூடிய கணனியை ஒரு மேசையில் வைக்கும் அளவுக்கு சிறியதாக உருவாக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதிலும் குறிப்பாக ஒரு சூப்பர் கணனியை ஒரு சக்கைரைக்கட்டி அளவுக்குள் அடக்குவதுதான் தமது நோக்கம் என்றும், இதற்கு மூளையை போன்றே கணனி செயல்படுவதற்கான முறையை கண்டுபிடித்தால் சாத்தியமாகும் என்றும் கூறுகின்றனர்.
இன்றைய நிலையில் IBM நிறுவனத்தின் அதிதீவிரமான சக்தி வாய்ந்த கணனியாக இருப்பது வட்சன் என்ற கணனியாகும்.
அமெரிக்காவில் நடந்த பொது அறிவுப் போட்டியில் இக்கணனி மனித மூளையை தோற்கடித்து விட்டது.
எனினும் இது நியாயமற்றது என்று கூறும் விஞ்ஞானிகள், மனித மூளை 20 Watts சக்தியை மட்டுமே பயன்படுத்தியது என்றும், கணனியோ 85,000 Watts சக்தியை பயன்படுத்தியது என கூறுகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு புதிய மின்னணு இரத்தத்தால் செயல்படும் கணனிகள் பதில் கூறும் என IBM நிறுவன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Wednesday, 16 October 2013

வி.எல்.சி. மீடியா பிளேயரின் வசதிகள் !!!!

வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராமினை நம்மில் அநேகர் வீடியோ பைல்ளை இயக்க மட்டுமே பயன்படுத்துகின்றேன். ஆனால் அதற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய புரோகிராம் இது கிடையாது. இதில் இருக்கும் அநேக பயன்பாட்டுகளை இங்கு காண்போம்.

1. மீடியா பைல்களின் பார்மர் மாற்ற:
வி.எல்.சி. பிளேயர் மூலம் மீடியா பைல்களின் பார்மட்களை எளிதாக மாற்றலாம். இதன் மூலம் வீடியோ பைல் ஒன்றை, மொபைல் சாதனங்களுக்கான வகையில் மாற்றம் செய்திடலாம் அல்லது நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில், குறிப்பிட்ட மீடியா பைல் இருக்கும் பார்மட்டினை இயக்கும் வசதி இல்லை என்றால், அந்த சாதனம் எந்த பார்மட்டை இயக்கும் திறன் கொண்டதோ, அந்த பார்மட்டிற்கு மாற்றிவிடலாம். இவ்வாறு பார்மட் மாற்றப்பட்ட பைலினைத் தனியே சேவ் செய்துவிடலாம்.
இதனை மேற்கொள்ள, மீடியா மெனுவில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Convert/Save பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர், எந்த பார்மட்டில் வீடீயோ பைல் மாற்றப்பட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதற்கு Edit Selected Profile என்ற பட்டனைப் பயன்படுத்தி, வீடியோ கட்டமைப்பின் (video encoding) பார்மட்டினை அமைக்கவும்.

2. மீடியா ஸ்ட்ரீமிங்:
வி.எல்.சி. பிளேயர் மூலம், நம் கம்ப்யூட்டரில், இணைய தளத்திலிருந்து அல்லது நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டரி லிருந்து, வீடியோ பைல்களை ஸ்ட்ரீமிங் எனப்படும் தொடர்ந்து பெறும் செயல்பாட்டினை மேற்கொள்ள முடியும்.
இதனை மேற்கொள்ள, Media மெனுவில், Stream என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் வி.எல்.சி. பிளேயர் புரோகிராம், மீடியா சர்வராக மாற்றப்படுகிறது.
இதனால், உங்கள் நெட்வொர்க்கில் உள்ள மற்ற கம்ப்யூட்டர் அல்லது உலகில் இணைய இணைப்பில் உள்ள எந்த கம்ப்யூட்டரும், உங்கள் கம்ப்யூட்டருடன் இணைப்பை ஏற்படுத்தி, வீடியோ பைல்களை ஸ்ட்ரீம் செய்து பயன்படுத்திக் கொண்டு பார்க்கலாம்.

3. டெஸ்க்டாப்பினை பதிவு செய்திட:
வி.எல்.சி. பிளேயர், உங்கள் டெஸ்க்டாப்பினை, ஓர் உள்ளீடு செய்திடும் சாதனமாகப் பயன்படுத்த உதவிடும். அதாவது, Convert/Save என்ற வசதியைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப்பில் உள்ள வீடியோவினை சேவ் செய்திடலாம்.
வி.எல்.சி. பிளேயரை, ஸ்கிரீன் கேப்சர் சாப்ட்வேர் போன்று மாற்றலாம். இதனை Stream வசதியுடன் பயன்படுத்தி, டெஸ்க்டாப்பில் உள்ள பைலை, தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் எதுவும் இல்லாமல், நெட்வொர்க் அல்லது இணையத்தில் ஒளி பரப்ப முடியும்.

4. வீடியோ பைல் கட்டுப்படுத்தல்:
பிரவுசரிலிருந்து கொண்டு, வீடியோ பைல் ஒன்று இயக்கப்படுவதனைக் கட்டுப்படுத்தலாம். வி.எல்.சி. புரோகிராமில், எச்.டி.டி.பி. சர்வர் ஒன்று இணைந்தே அமைக்கப்பட்டுள்ளது. இதனை செட் செய்துவிட்டு, அதன் பின்னர், இந்த வி.எல்.சி. கிளையண்ட் புரோகிராமினை, பிரவுசர் ஒன்றிலிருந்து கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
அது மட்டுமின்றி, மீடியா மையமாக இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை, வெப் பிரவுசர் மூலமாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். ஆடியோ அல்லது வீடியோ பைல்களை வரிசைப் படுத்தலாம். அவை இயக்கப்படுவதனை நெறிப்படுத்தலாம்.
இதனை ஸ்மார்ட் போன் ஒன்றுடன் இணைத்துப் பயன்படுத்தி, வி.எல்.சி. பிளேயரின் இயக்கத்தினையும் கட்டுப்படுத்தலாம். மொபைல் சாதனங்களில் வி.எல்.சி. பிளேயருக்கான ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துவதற்கென பல அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

5. யு.ட்யூப் வீடியோ பார்க்க:
உங்கள் வெப் பிரவுசருக்கு வெளியே, யு ட்யூப் வீடியோவினைப் பார்த்து ரசிக்க ஆசைப்படுகிறீர்களா? யு ட்யூப் தளம் சென்று, விரும்பும் வீடியோ உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். பின் அதன் இணைய தள முகவரியினை காப்பி செய்திடவும்.
இனி, வி.எல்.சி. பிளேயரில், Media மெனுவில் கிளிக் செய்திடவும். அடுத்து, Open Network Stream என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பெட்டியில், காப்பி செய்த குறிப்பிட்ட வீடியோ இணைய தள முகவரியினை ஒட்டவும்.
வி.எல்.சி. பிளேயர், குறிப்பிட்ட வீடியோவினை யு ட்யூப்பிலிருந்து லோட் செய்து, உங்கள் டெஸ்க்டாப்பில், வி.எல்.சி. விண்டோ ஒன்றைத் திறந்து இயக்கிக் காட்டும். வீடியோ இயக்கப்படுகையில், Tools மெனு கிளிக் செய்து, Codec Information தேர்ந்தெடுக்கவும்.
இங்கு Location boxல், அந்த MP4 வீடியோவின் முழு இணைய முகவரியும் காட்டப்படும். இதனை காப்பி செய்து, ஏதேனும் ஒரு டவுண்லோட் மேனேஜரில் பேஸ்ட் செய்திடலாம். அல்லது வெப் பிரவுசரில் பேஸ்ட் செய்திடலாம். இவ்வாறு செய்து, அந்த யு ட்யூப் வீடியோவினை, உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

6. இணைய ரேடியோ கேட்கலாம்:
முன்பு, விண் ஆம்ப் மூலம் இணைய ரேடியோ நிலைய ஒலிபரப்பினைக் கேட்டு வந்தோம். வி.எல்.சி. பிளேயரில், இணைய ரேடியோ ஸ்டேஷன்களின் பட்டியலைப் பெறலாம்.
இதற்கு playlist திறந்து, அங்கு Icecast Radio Directory என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, உங்களுக்குப் பிரியமான இசை அல்லது ரேடியோ ஸ்டேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டைரக்டரியில் இல்லாத இணைய ரேடியோ நிலையங்களையும் வி.எல்.சி. பிளேயரில் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த ரேடியோ இணைய தளங்களில், பொதுவாக, "listen” என்ற லிங்க்கினைக் காணலாம். இதில் கிளிக் செய்து, வி.எல்.சி. பிளேயரில், ஒலி பரப்பினைக் கேட்கலாம். மேலே சுட்டிக் காட்டியது மட்டுமின்றி, இன்னும் பல புதிய ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளை, வி.எல்.சி. பிளேயர் கொண்டுள்ளது. பயன்படுத்தி மகிழவும்.

உரிமம் : Techlankasri  

IP Address-யை கண்டறிய வேண்டுமா ?

இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் இணையம் என்பது ஒரு புரியாத புதிராக இருக்கலாம்.
இணையத்தை பயன்படுத்தும் போது நம் இணைப்பிற்கென ஒரு IP Address தரப்படுகிறது.
இந்த முகவரியை இரண்டு விதமாக அறிந்து கொள்ளலாம்.

முதல் வழி
1. முதலில் Network Sharing Center என்பதனைத் திறந்து கொள்ளவும்.
இதனை திறப்ப்தற்கு உங்களுடைய டாஸ்க் பாரில் உள்ள சிஸ்டம் ட்ரேயில், நெட்வொர்க்கிங் ஐகான் இருந்தால், அதனை கிளிக் செய்து Open Network and Sharing Center என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
அல்லது ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் தேடல் கட்டத்தில், network and sharing center என டைப் செய்திடவும். இதற்கான லிங்க் கிடைத்தவுடன் அதில் கிளிக் செய்திடவும்.
2. இப்போது Network and Sharing Center கிடைக்கும். இங்கு Local Area Connection என்பதில் கிளிக் செய்திடவும் அல்லது உங்கள் இணைய இணைப்பிற்கு ஒரு பெயரினைக் கொடுத்திருந்தால் View your active networks என்பதன் கீழாக அது காட்டப்படும், அதில் கிளிக் செய்திடவும்.
3. Status என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படுகையில், Details என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Network Connection Details என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
இதில் அப்போதைய இணைப்பிற்கான ஐ.பி. முகவரியும், அதன் தொடர்பான தகவல்களும் கிடைக்கும். இந்த தகவல்களில், நீங்கள் பெற்றிருக்கும் இணைப்பின் காலம், காலம் காலாவதியாகும் நாள், சேவை நிறுவன முகவரி, சர்வரின் முகவரி ஆகியவை காட்டப்படும்.

இரண்டாவது வழி
1. ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்திடவும்.
2. இங்கு cmd /c ipconfig & pause என டைப் செய்து எண்டர் தட்டவும்.
3. இது டாஸ் கட்டளைப் புள்ளி ஒன்றைக் காட்டும். நாம் கேட்ட தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கும். ஏதேனும் ஒரு கீயை அழுத்தினால், இந்த டாஸ் கட்டம் மூடப்படும்.
4. மேலே சொன்னபடி நெட்வொர்க் குறித்த கூடுதல் தகவல்கள் தேவைப்படின் cmd /c ipconfig /all & pause என கட்டளை அமைத்து எண்டர் தட்டவும்.
5. நேரடியாக டாஸ் கட்டம் பெற்று, தேவையான தகவல்களைப் பெற ipconfig or ipconfig/all என்றபடியும் கட்டளைகளை அமைத்துப் பெறலாம்.



Tuesday, 24 September 2013

கூகுள் இணையதளத்தின் புதிய முயற்சி !

கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்பட்டு அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும்.
இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். கூடிய விரைவில் மக்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இதன் தொழில்நுட்பம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பலூன்கள் இன்று நியூசிலாந்து நாட்டில் உள்ள கிரைஸ்ட்சர்ச் என்ற இடத்திலிருந்து பறக்க விடப்பட்டுள்ளன. இவை ஆகாய விமானங்களை விட இரண்டு மடங்கு உயரத்தில் பறக்கக் கூடியவை.
இத் தொழினுட்பத்தின் மூலம் 3ஜி வேகத்துடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை மக்கள் பெறமுடியும். தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழு இந்த பலூனையும் தயாரித்துள்ளது.
பிராஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் இயக்குனர் மைக் காசிடி இதனை ஒரு நிலவு வீச்சு என்று வர்ணித்தார். தான் சொல்லும் திட்டம் விஞ்ஞானக் கதை போலத் தெரியலாம்.
ஆயினும் பெரிய பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய முடிவு இது என்று அவர் கூறினார்.

இது போன்ற பலூன்கள், பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாயமார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும்.

மனித உருவில் ஆன ரோபோ உருவாக்கம் !


பலவிதமான வடிவங்களில் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது மனித உருவில் ஆன 'ரோபோ' உருவாக்கப்பட்டுள்ளது.
'டெர்மினேட்டர்–2' படத்தில் ஹொலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் எந்திரமனிதனாக நடித்து இருப்பார். அதுபோன்ற அமைப்பிலான மனித ரோபோ ஆக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனது உடலில் காயங்களோ அல்லது கோளோரோ ஏற்பட்டால் அதை அந்த ரோபோவே 2 மணி நேரத்தில் சரி செய்து கொள்ளும் திறன் படைத்தது.
இதை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தாங்கள் உருவாக்கிய இந்த ரோபோவை ரேஷர் பிளேடால் 2 துண்டுகளாக வெட்டி போட்டனர். ஆனால் 2 மணி நேரத்தில் அதை தானே 'ரோபோ' சரி செய்து ஒட்டிக்கொண்டது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது மிமெடிக் என்ற உலோக கலவையினால் ஆனது. இந்த உலோக கலவையை எலெக்ட்ரிக் பொருட்கள், கார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களில் உள்ள பிளாஸ்டிக் உதிரி பாகங்களுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும்.

Monday, 23 September 2013

ஒன்லைனில் இலவசமாக பெறும் 7 விடயங்கள் !

தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.
இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.
ஒன்லைன் மூலம் பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
ஒரு சில விடயங்களை நீங்கள் ஒன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.

* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களா www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.

* நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

* எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள் www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.
* சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.

* ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.

* உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள் www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.

Friday, 13 September 2013

ஜிமெயில் அறிமுகப்படு​த்தியுள்ள புத்தம் புதிய வசதி !

மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் ஜிமெயில் ஆனது காலத்திற்கு காலம் புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் அண்மையில் மின்னஞ்சல்களை உருவாக்குவற்கான புதிய பொப் அப் விண்டோவினை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்த விண்டோவானது வலது புற கீழ் மூலையில் சிறிய அளவு விண்டோவாக தோன்றுவதாக காணப்பட்டது.
ஆனால் தற்போது குறித்த விண்டோ திரை முழுவதும் தோன்றக்கூடியவாறு(Full Screen Compose Window) மாற்றியமைத்துள்ளது.
இந்த வசதியினை பெறுவதற்கு ஜிமெயில் பொப் அப் விண்டோவின் வலது கீழ் பகுதியிலுள்ள More Option என்பதை தெரிவு செய்து தோன்றும் மெனுவில் Default to Full-Screen என்பதனை தெரிவு செய்யவும்.
இதேவேளை அண்மையில் மின்னஞ்சல்களை இலகுவாக தரம்பிரிக்கக்கூடியவாறு டேப் வசதியையும் ஜிமெயில் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, 12 September 2013

மடிக்கணனி வாங்க சில டிப்ஸ்கள் !

இன்று பள்ளி படிக்கும் மாணவர்கள் தொடங்கி கல்லூரி, ஆபிஸ் என்று அனைத்திலும் தற்போது லேப்டாப் வந்துவிட்டது எனலாம் அந்த அளவுக்கு இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று சந்தையில் ஏராளமான மடிக்கணனிகள் நமக்கு கிடைக்கின்றன ஆனால் அவற்றில் எது சிறந்தது என்று நாம் சற்று குழம்புவோம்.
ஏனென்றால் நாம் அதை மற்றவைகளுடன் அதை ஒப்பிட்டு பார்க்கையில் ஒன்றை விட ஒன்று பெட்டராக தான் தெரியும்.
நீங்கள் சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் இங்கு சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதை பாருங்கள் அதன் பின்பு நீங்கள் மிக எளிதாக நல்ல லேப்டாப்பை வாங்குவீர்கள்.
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விடயத்தை கவனமாக பார்க்கவேண்டும் நீங்களே பாருங்கள்.
 
* பிராஸஸர்(Processor) என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7.
அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.
* எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processorஐ intel Core i7, Intel Core i5, Intel Core i3 என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
* இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட திறன் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processorஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
* இதை விட தரம் குறைவான Processorஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.
* எனவே Intel® CoreTM i7-640M Processor 2.80 GHz அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும்.
* இந்த நம்பரையும் நீங்கள் கவனமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது.
* 2.00 GHz லேப்டாப் மொடலை விட 2.80 GHz மடிக்கணனி மொடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் அதில் வேறு எந்த சிறப்பம்சமும் இல்லை என்று பொருள் நண்பரே.
* கணிப்பொறியில் மிக முக்கியமான விடயம் RAM நீங்கள் கணனியை திறந்த பின்பு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கணனியின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது.
* அதனால் இன்றைய அட்வான்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
* இதில் இன்னொரு முக்கியமான விடயம் DDR3 என்ற அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் மடிக்கணனியில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள்.
* பொதுவாக விலை குறைந்த மடிக்கணனி வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, எனவே ரேம் விடயத்தில் சற்றி கவனம் தேவை நண்பரே.
* பொதுவாக கணனியை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கணனியின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக நினைக்கிறார்கள்.
* உங்களுக்கு முதலில் ஒரு பொதுவான விடயத்தை சொல்கிறேன் கணனி இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
* ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதிவேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.
* மேலும் நீங்கள் கோரல்ட்ரா (Coreldraw), போட்டோஷொப் (photoshop) போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.
* டி.வி.டி. டிரைவ்(DVD DRIVE) நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவனம் எடுக்க தேவை இல்லை.
ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
* விலை குறைந்த மடிக்கணனி அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிராபிக்ஸ் கார்டு இணைந்திருப்பது இல்லை.
கிராபிக்ஸ் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.
* நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோஷொப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று.
* அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.
* இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விடயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.
* இதில் Dedicated Graphic என்று நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.
இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிட்டி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை.
கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.
* ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.
* அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
* போட்டோஷொப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபிக்ஸ் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.
* விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.
* இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Windows 8 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள்.
இவை மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெர்சன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கும் நண்பரே.
* இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெர்சனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெர்சனை தேர்ந்தெடுங்கள்.
Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிக சிறந்தது.
Windows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் (Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.
அடுத்ததாக புதிய வகை மடிக்கணனிகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது. இருப்பினும் இவை உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்
இவ்வளவு தான் நண்பரே இதை நீங்கள் சரி பார்த்து வாங்கினால் உங்களது மடிக்கணனி தான் பெஸ்ட்.

Wednesday, 17 July 2013

கணனியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள் !

இன்றைய தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோனார் கணனி பயன்படுத்துகிறோம். பல நேரங்களில்  இக்கணனியின் வேகம் குறைந்து நம்மை எரிச்சலூட்டுகின்றன.
எனவே உங்கள் கணனியின் வேகத்தை அதிகரிக்கப்பதற்கான 10 வழிகளைக் காண்போம்.

1. உங்கள் கணனியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணனிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணனியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் . புதிதாகக் கணனி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள்.
அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணனியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என்று ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என்று ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby (http://www.digsby.com/) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணனியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே தொடங்கும். இதற்கு auto startup என்று பெயர்.
இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் தொடங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள். MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணனியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின்னர் கணனியின் வேகம் அதிகரித்தது.

9. கணனியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரஜ்எதிர்ப்பான் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்பான் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்க கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணனிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணனிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

லேப்டொப் பட்டரிகளின் முழுமையான விபரங்களை அறிந்துகொள்வதற்கு !

லேப்டொப் கணனிகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டரிகள் காலம் செல்லச் செல்ல பொதுவாக அவற்றின் பாவனைத் திறன் குறைந்து கொண்டே செல்லும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதற்காக குறித்த பேட்டரிகளின் நிலை தொடர்பில் முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள BatteryCare எனும் சிறிய மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
முற்றிலும் இலவசமான மென்பொருளில் உதவியுடன் பட்டரிகளை மட்டுமன்றி CPU, Hard Disk போன்றவற்றின் வெப்பநிலைகளையும் அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு லேப்டொப்பினை பாவனை செய்ய முடியும்.

மனித உடலைத் தாங்கும் செயற்கை வன்கூட்டை உருவாக்கி ஜப்பான் மாணவிகள் சாதனை (வீடியோ இணைப்பு) !

மனித உடலுக்கு வடிவத்தைக் கொடுப்பதுடன் உடற்பாகங்களை தாங்குவதில் எலும்புகளால் ஆக்கப்பட்டுள்ள வன்கூடுகளின் பங்களிப்பு அளப்பரியதாகும்.
எனினும் சில சமயங்களில் இவ்வாறான எலும்புகளில் ஏற்படும் பல்வேறு நோய்களால் உடலைத் தாங்கிக்கொண்டு அசைவதற்கு இயலாமல் போகலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகொடுக்கக்கூடிய செயற்கையான புறவன்கூட்டை உருவாக்கி ஜப்பான் மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
MK3 Exoskeleton Suit என்றழைக்கப்படும் இந்த செயற்கை வன்கூடானது 7 அடி உயரமானதாகவும், 55 பவுண்ட் எடை உடையதாகவும் காணப்படுகின்றது.
எனினும் இதன் விலைதான் சற்று அதிகமாகும். அதாவது 123,000 டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 







தவறுகளை சுட்டிக் காட்டும் பேனா அறிமுகம் !

ஆங்கில எழுத்துக்களை எழுதும் போதோ அல்லது அவற்றினை பயன்படுத்தி சொற்களை உருவாக்கும் போதோ ஏற்படும் தவறுகளை அதிர்ச்சியின் மூலம் சுட்டிக் காட்டும் பேனா சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது.
இந்நிலையில் மேலும் சில தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு பேனா உருவாக்கப்பட்டுள்ளது.
இது பொருத்தமான அதிர்ச்சிகளின் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Lernstift எனப்படும் இப்பேனாவானது கற்றலில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.