மனித உடலுக்கு வடிவத்தைக் கொடுப்பதுடன் உடற்பாகங்களை தாங்குவதில்
எலும்புகளால் ஆக்கப்பட்டுள்ள வன்கூடுகளின் பங்களிப்பு அளப்பரியதாகும்.
எனினும்
சில சமயங்களில் இவ்வாறான எலும்புகளில் ஏற்படும் பல்வேறு நோய்களால் உடலைத்
தாங்கிக்கொண்டு அசைவதற்கு இயலாமல் போகலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில்
கைகொடுக்கக்கூடிய செயற்கையான புறவன்கூட்டை உருவாக்கி ஜப்பான் மாணவிகள்
சாதனை படைத்துள்ளனர்.
MK3 Exoskeleton Suit என்றழைக்கப்படும் இந்த செயற்கை வன்கூடானது 7 அடி உயரமானதாகவும், 55 பவுண்ட் எடை உடையதாகவும் காணப்படுகின்றது.
எனினும் இதன் விலைதான் சற்று அதிகமாகும். அதாவது 123,000 டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment