PaidVerts

Wednesday 26 December, 2012

விண்டோஸ் லைவ் மெஷ் மூடப்படுகிறது

பைல்களை ஒருங்கிணைத்து பாதுகாத்து தேக்கி வைக்கும் சேவையினை கடந்த 2008 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் மெஷ் (Windows Live Mesh) என்ற பெயரில் தொடங்கியது. இது Live Mesh, Windows Live Sync, and Windows Live FolderShare எனவும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கால கட்டத்தில், இந்த சேவையினை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துவதாக அறிவித்திருந்தது. பைல்களை நம் சாதனங்களில் இல்லாமல், ரிமோட் இயக்கத்தில் சேமித்து, தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தக் கொடுத்த வசதிகளில், விண்டோஸ் லைவ் மெஷ் முதலிடம் பெற்றிருந்தது. ஆனால், பின்னர், மைக்ரோசாப்ட் பல்வேறு வசதிகளை அளிக்க முற்படுகையில், ஸ்கை ட்ரைவ் என்ற இன்னொரு கட்டமைப்பினை ஏற்படுத்தியது. லைவ் மெஷ் மூலம் தந்து வந்த வசதிகளை இன்னும் கூடுதல் எளிமையுடன் தர முடியும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. தற்போது லைவ் மெஷ் வசதிகள் அனைத்தையும் ஸ்கை ட்ரைவில் தருவதனால், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஸ்கை ட்ரைவிற்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது. வரும் பிப்ரவரி 13 முதல் லைவ் மெஷ் வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும்,எந்த வித சப்போர்ட்டும் தரப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.லைவ் மெஷ் பயன்படுத்திய அனைவருக்கும் இது குறித்து தனித்தனியே மெயில் மெசேஜ் அனுப்பி, மைக்ரோசாப்ட் தான் எடுத்த முடிவினை அறிவித்தது. தற்போது 25,000 பேருக்கும் குறைவாகவே விண்டோஸ் லைவ் மெஷ் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்கை ட்ரைவ் வசதியினை 20 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
லைவ் மெஷ் மூலம், அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை தூரத்தில் இருந்து இயக்கும் வசதியைப் பெற்றிருந்தனர். ஆனால், ஸ்கை ட்ரைவில் அந்த வசதியினை மைக்ரோசாப்ட் தரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வசதியினை தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்பினை தான் வழங்கும் ரிமோட் டெஸ்க் டாப் தொடர்பினைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், லைவ் மெஷ் வாடிக்கையாளர்கள் இதனை விரும்பவில்லை.

Copyrights : Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13456&ncat=4 

Friday 21 December, 2012

குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க

வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி: மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.

Copyrights : Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13370&ncat=4 

விண்டோஸ் 8க்கான விண்ஸிப்

1991 ஆம் ஆண்டு வெளியானது முதல், விண்ஸிப் பயன்பாடு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்புவதற்கும், விரித்துப் படிப்பதற்கும், விண்ஸிப் அப்ளிகேஷன்கள் பெரும் பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே நிறுவனம், விண்ஸிப் சார்ந்து ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட் (ZipShare, ZipSend) ஆகிய சேவைகளையும் வழங்குகிறது. iOS மற்றும் Android சிஸ்டங்களுக்கான விண்ஸிப் வெளியான நிலையில், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்குமான விண்ஸிப் வெளியாகியுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென வெளியாகியுள்ள பைல்களைக் கையாளும் முதல் அப்ளிகேஷன் இதுதான். பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்பவும், விரித்துச் செயல்படுத்தவும் இது உதவுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கேற்ப, தொடு திரை செயல்பாட்டில் இயங்குகிறது. 128 அல்லது 256 பிட் ஏ.இ.எஸ். என்கிரிப்ஷன் தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பேஸ்புக் சமூக இணைய தளத்திற்கான பைல் ஷேர் பயன்பாட்டிற்கு ZipShare உதவுகிறது. மிகப் பெரிய பைல்களை அனுப்ப ZipSend உதவுகிறது. மேலதிகத் தகவல்களுக்கு http://www.winzip.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Copyrights : Dinamalar
 http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13367&ncat=4

ஆப்பிள் சாதனங்களில் தமிழ்

விண்டோஸ் பயன்படுத்தப்படும் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த பல வகை எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல ட்ரைவர் தொகுப்புகளும் உள்ளன. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களான மேக் கம்ப்யூட்டர், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் தமிழ் பயன்படுத்த, யாரும் அவ்வளவாக முயற்சி எடுக்கவில்லை. இந்த வகையில் கம்ப்யூட்டரில் வெகு காலமாக தமிழைப் பயன்படுத்துவதில் ஆய்வு மேற்கொண்டு வரும், மலேசியாவைச் சேர்ந்த முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன், மொபைல் போன் மற்றும் ஐ பேட் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த "செல்லினம்' என்ற ஒரு தமிழ் மென் பொருளை உருவாக்கித் தந்துள்ளார்.
இவரே 1994 ஆம் ஆண்டு வாக்கில், விண்டோஸ் சாதனங்களில் பயன்படுத்த முரசு அஞ்சல் என்னும் மென்பொருளை உருவாக்கி,
உலகெங்கும் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் தன் இணைய தளத்தில் தந்தார். இதில் என்ன சிறப்பு எனில், தமிழுக்கென இவர் தரும் அனைத்து மென்பொருள் தொகுப்புகளும், எழுத்துரு கோப்புகளும் முற்றிலும் இலவசமாகவே தரப்பட்டு வருகின்றன. தமிழ் மொழிக்குத் தன் சேவையாகவே இதனைக் கருதுகிறார். ஆப்பிள் சாதனங்களுக்கான தமிழ் தெரிந்து கொள்ளும் முன், தமிழ் மொழி ஏன் மிகத் தாமதமாகவே கம்ப்யூட்டரில் செயல்படுத்தப்பட்டது எனப் பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் பயன்பாடு தொடங்கிய காலத்திலிருந்து, ஆங்கிலம், அதுவும் அமெரிக்க ஆங்கிலமே அதன் மொழியாக இருந்து வந்தது. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு, ஆங்கிலம் அல்லா மற்ற மொழிகளும், கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய கட்டாயத்தினைக் கொண்டு வந்தன. இதனை அடுத்து, ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கூடப் பயன்படுத்தாத நாடுகளின் மொழிகள், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சீனா, ஜப்பான், கொரியா மற்றும் அரபு நாடுகளின் மொழிகள், கம்ப்யூட்டரில் இடம் பெற்றன.
இந்தியாவில் பெர்சனல் கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்தியவர்கள், ஆங்கில மொழிப் பயன்பாட்டில் சிறப்பாக இயங்கியதால், மாநில மொழிகள் தேவை முதல் கட்டத்தில் இல்லாமல் இருந்தது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் போல, அரசு, நம் மொழிகள் கட்டாயமாக கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றவில்லை.
1985 ஆம் ஆண்டுக்குப் பின்னரே, ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்தன. இந்திய மாநில மொழிகள், 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னரே செம்மைப் படுத்தப்பட்டன. பல்வேறு காரணங்களால், தமிழ் இடம் பெறுவதில் குழப்பங்கள் ஏற்பட்டன. கம்ப்யூட்டர் வல்லுநரான தமிழர்கள், அவரவர் எண்ணப்படி பலவகைகளில் தமிழ் மொழி பயன்பாட்டினைக் கொண்டு வந்தனர். இன்று தமிழ் மொழி பயன்பாடு, யூனிகோட் என்ற வகையில், ஒருமுகப்படுத்தப்பட்ட பின்னரும், சில சொந்த காரணங்களுக்காக, தமிழ் இன்னும் பல முகங்களில் கம்ப்யூட்டரில் இடம் பெற்று வருகிறது. இது சாதாரணப் பயனாளர், எளிமையாகத் தமிழைப் பயன்படுத்தத் தடையாக உள்ளது. இந்தக் குழப்பம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல இயலவில்லை.
தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் பயன்படுத்த மெல்லினம் அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. தமிழில் மெல்லினம், வல்லினம் மற்றும் இடையினம் என மெய்யெழுத்துக்கள் பிரிவிற்குப் பெயர்கள் இருப்பதைப் போல, டிஜிட்டல் தமிழை, குறிப்பாக மொபைல் சாதனங்களுக்கான தமிழை, மெல்லினம் என, இதனைத் தயாரித்தவர் பெயரிட்டுள்ளார்.
மொபைல் போனில் தமிழ் என்றவுடன், நமக்கு எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திதான் நினைவுக்கு வரும். மொபைலில் தமிழ் பெற, அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இருவருமே, தமிழ் மென்பொருளைப் பதிந்து வைத்திருக்க வேண்டும். செல்லினம் ஆப்பிள் சாதனங்களில் இயங்க, ஐ.ஓ.எஸ்.4 (iOS4) ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும். இது இல்லாதவர்கள், ஐ போன் 3ஜி, ஐபோன் 3ஜி எஸ் மற்றும் ஐபாட் டச் வைத்திருப்பவர்கள், இலவசமாகவே இதனை அப்கிரேட் செய்து கொள்ளலாம். http://www.apple.com/ iphone/softwareupdate/ என்ற முகவரியில் உள்ள தளத்தில், இதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன்படி, ஐட்யூன்ஸ் சாப்ட்வேர் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து, அதற்கான அக்கவுண்டினைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், கீழே உள்ள லிங்க் நமக்குத் திறக்கப்பட்டு, செல்லினம் மென்பொருள் கிடைக்கும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்த பின்னர், http://www.iphoneappshome. com/sellinamiphone337936766.html என்ற ஆப்பிள் நிறுவன இணையதளத்திற்குச் சென்று, செல்லினம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, பதிந்து கொள்ளலாம்.
http://download. cnet.com/Sellinam/300012941_475091250.html என்ற முகவரியிலும் இந்த மென்பொருள் கிடைப்பதாகக் கூகுள் தேடுதளம் தகவல் தரும். இங்கு சென்றாலும், முதலில் சொல்லப்பட்ட ஆப்பிள் இணைய தளத்திற்குத் தான் நாம் அழைத்துச் செல்லப்படுவோம். இந்த மென்பொருளை, ஆப்பிள் சாதனங்களில் பதிவதும் எளிதே. தற்போது செல்லினம் பதிப்பு 3.0 கிடைக்கிறது. பைலின் அளவு 1.7 எம்.பி. இதனை இறக்கிப் பதிந்து பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை. இதனைப் பயன்படுத்தும் வழிகளை http://www.ucsc.cmb.ac.lk/ltrl/projects/TamilSMS/html/usermanual.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியலாம். செல்லினம் மென்பொருளுக்கென இயங்கும் தளத்திலும் (http://sellinam.com/) வேண்டிய தகவல்கள் கிடைக்கின்றன.
செல்லினம் மூலம், நாம் தமிழில் செய்திகளை அமைத்து அனுப்பலாம். இதில் அமைக்கப்பட்ட செய்திகளை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களிலும் அமைக்கலாம். போனடிக் எனப்படும் (ஆங்கில) ஒலி அடிப்படையில் இதன் கீ போர்டு இயங்குகிறது. இதனை பதிந்து வைத்திருந்தால், சில நூல்களையும், இலக்கியங்களையும் படிக்கலாம்.
செல்லினம் தவிர, தமிழர்களிடையே பிரபலமான, ஆங்கிலம்- தமிழ், லிப்கோ அகராதியும், ஆப்பிள் மொபைல் சாதனங்களில் பயன்படும் வகையில் தரப்படுகிறது.ஆனால், இதனைப் பெற 5 டாலர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனையும் ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளத்தில், http://itunes.apple.com/ app/lifcosellinamtamildictionary/id391740615?mt=8 என்ற முகவரியில் பெறலாம். இந்த அகராதியில், சொற்களைத் தேடிப் பெரும் வசதி தரப்பட்டுள்ளது.

Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13366&ncat=4

Tuesday 18 December, 2012

இந்த வார இணையதளம் - உலக காரட் அருங்காட்சியகம்

உடம்பிற்கு நல்லது, இரத்த ஓட்டத்தினைச் சீரமைக்கும் என்றெல்லாம் சொல்லி, நமக்குச் சிறு வயதிலிருந்து காரட் கொடுத்து நம் பெற்றோர் வளர்த்திருப்பார்கள். (சில வேளைகளில் அதிக விலை விற்றால், இரத்த ஓட்டத்தினை எகிறவும் வைக்கும்). இந்த காரட் எத்தகையது, எத்தனை வகை காரட் உள்ளது, இதன் பூர்விகம் என்ன, இவற்றிற்கான விதைகள் எங்கிருந்து எப்படி வந்தன போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உலக காரட் அருங்காட்சியம் ஒன்று இணையத்தில் இயங்கி வருகிறது. இதன் முகவரி http://www.carrotmuseum.co.uk/.
இதில் நுழைந்து பார்த்தவுடன் காரட் குறித்து நமக்கு அளிக்கப்படும் தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. இந்த இணைய தளத்தில், Start Your Tour என்ற பகுதியில் இருந்து தொடங்கினால், காரட் எப்படி எல்லாம் வளர்க்கப்பட்டது என்ற பழங்காலத் தகவல் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
அடுத்ததாக, காரட் வண்ணங்கள் என்ற பிரிவு. காரட் எப்போதும் ஒன்று அல்லது இரண்டு வண்ணங்களில் தான் இருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு, இதன் வண்ணங்கள் நமக்கு புதியவையாய் கிடைக்கின்றன. இவற்றோடு, காரட் நம் உடம்பிற்கு என்ன சத்துவகையைத் தரும், காரட் கொண்டு தயாரிக்கப் படக் கூடிய உணவிற்கான சமையல் குறிப்பு ஆகியவை கிடைக்கின்றன. இப்படியே, பல்வேறு பிரிவுகளில் தகவல்களைத் தந்து ஆச்சரியம் தரும் இந்த தளத்தை ஒருமுறையேனும் பார்த்துவிடுங்கள்.


Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13364&ncat=4

1.6 கோடி சாம்சங் கம்ப்யூட்டர்கள்

இந்த ஆண்டில், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்பட்ட, ஒரு கோடியே 60 லட்சம், சாம்சங் டேப்ளட் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர்களை, இந்தியாவிற்கு விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன துணைத் தலைவர், ஜின் பார்க் அறிவித்துள்ளார். சாம்சங் தொடுதிரையுடன் கூடிய அல்ட்ரா புக் கம்ப்யூட்டரினை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது. ATIV Smart PC and ATIV Smart PC Pro Series 5 Ultra Touch ஆகியவை மற்ற கம்ப்யூட்டர்களாகும். இவை அனைத்தும் விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களாகும்.
Ativ Smart PC and Ativ Smart PC Pro ஆகியவற்றில், பட்டன் ஒன்றை அழுத்துவதன் மூலம், நோட்புக் பெர்சனல் கம்ப்யூட்டராக இருக்கும் இவற்றை, டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர் சாதனமாக மாற்றலாம். இவற்றில் 11.6 அங்குல அகலத்தில் திரை தரப்பட்டுள்ளது. இவற்றின் தடிமன் முறையே, 9.9.மிமீ மற்றும் 11.9 மிமீ. ஆக உள்ளது. Ativ Smart PC ரூ.75,490 என விலையிடப் பட்டுள்ளது. Ativ Smart PC விலை ரூ.53,990.
5 Ultra Touch வரிசையில் வந்துள்ள விண்டோஸ் 8, சாம்சங் நோட்புக் கம்ப்யூட்டர்கள், தொடுதிரை கொண்ட சாம்சங் நிறுவன முதல் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்களாகும். இதன் திரை, மல்ட்டி டச் வசதி கொண்டு, 13.3 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையான அளவில் எச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி 3 போர்ட் ஒன்று மற்றும் யு.எஸ்.பி 2 வகை போர்ட் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. மல்ட்டி எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஈதர்நெட் போர்ட், 1.3 மெகா பிக்ஸெல் இணைய கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.64,990.

Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13363&ncat=4

எக்ஸெல் தொகுப்பில் ரோமன் எண்கள்

சில வேளைகளில், வழக்கமான எண்களுக்குப் பதிலாக, ரோமன் எண்களை (எ.கா. VIII) நாம் பயன்படுத்த விரும்புவோம். அனைத்து எண்களுக்கும் நாம் ரோமன் எண்ணை நினைவில் வைத்து பயன்படுத்த முடியாது. எக்ஸெல் தொகுப்பில் இதற்கென சிறிய பார்முலா ஒன்றைக் கொடுத்தால், அது தானாகவே ரோமன் எண்ணை அமைத்துக் கொள்கிறது. அந்த பார்முலா =ROMAN(123). இதில் 123 என்ற இடத்தில், நாம் பயன்படுத்த விரும்பும் ரோமன் எண்ணுக்கான வழக்கமான எண்ணை அமைத்துவிடலாம். இந்த இடத்தில் 1 முதல் 3,999 வரை பயன்படுத்தலாம். (இந்த ரேஞ்சுக்கு மேலாக ரோமானியர்கள் எண்களைப் பயன்படுத்தவில்லையா எனத் தெரியவில்லை) ரோமன் எண்கள் டெக்ஸ்ட்டாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. எனவே இதனை எந்த கால்குலேஷனிலும் பயன்படுத்த முடியாது.

ஐபேட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்

புதியதாக ஐபேட் அல்லது ஐபேட் மினி வாங்கியிருக்கிறீர்களா? அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதன் பயன்பாடு, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக, பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தான் அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன. எந்த அளவிற்கு அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிந்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு ஐ பேட் அதிகப் பயனுள்ளதாகத் தெரியும். எனவே, ஐபேட் ஒன்றில், நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.

1. ட்ராப் பாக்ஸ் (Dropbox):

க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோர் செய்திட வசதி தரும் ட்ராப் பாக்ஸ் நிச்சயம் ஐபேடில் தேவை. இது ஓர் இலவச சேவை. அதிக நண்பர்களை பரிந்துரைத்து அவர்களும் பதிந்து கொண்டால், நீங்கள் 16 ஜிபி வரையில் அளவிலான பைல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் வசதி என்றாலும், உங்கள் ஐபேடில் வைத்துக் கொள்வதில் சிக்கல் எழாது. இதன் பிரபலமான தன்மையினாலேயே, ஆப்பிள் நிறுவனமும் இதே போல ஒன்றை உருவாக்கியது. ஆனால், மக்கள் அதனை விரும்பவில்லை.


2. பிளிப் போர்ட் (Flipboard):

உங்களுக்கான டிஜிட்டல் பக்கங்களை மிகச் சிறப்பாக உருவாக்க, பிளிப் போர்ட் உதவுகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நாம் நமக்கென ஓர் இதழை இதன் உதவியுடன் தயாரித்து வெளியிடலாம். இதனைப் பெற https://itunes.apple. com/us/app/flipboardyoursocialnews/id358801284?mt=8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

3. பேஸ்புக் (Facebook):
நீங்கள் பேஸ்புக் தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் ஐபேடில் இருக்க வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் 2011 ஆம் ஆண்டில் இடையேதான் கிடைக்கத் தொடங்கியது. இதனைப் பெற இணைய தளத்தில் https://itunes.apple.com/us/app/facebook/id284882215?mt=8 என்ற முகவரிக்குச் செல்லவும்.

4. எய்ம் (AIM for IPAD):
பெரிய அளவிலான டச் கீ போர்டுடன், இன்ஸ்டண்ட் மெசேஜ் சாதனமாக ஐ பேட் இயங்குகிறது. சிறிய அளவிலான செய்திகள், அதற்கான பதில்களை மிக எளிதாக இதில் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஐ பேட் சாதனத்திற்கான எய்ம் அப்ளிகேஷன் பலருக்கு பிடித்துள்ளது. இதில் உரையாடல்களைக் கையாள்வது மிக எளிது. இதன் மூலம் பேஸ்புக் மற்றும் கூகுள் டாக் நண்பர்களுடன் உறவாடலாம். டெக்ஸ்ட் மெசேஜ் எடுத்துக் கொள்ளும் போன்களுக்கு, வை பி மூலம் இணைக்கப்பட்ட ஐ பேட் சாதனம் வழியாக, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம். இதுவும் இலவசமே. இதனைப்பெற https://itunes. apple.com/us/app/ aimforipad/id364193698?mt=8 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.


 Coprights : Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13361&ncat=4 

வேர்ட் டிப்ஸ்: பெரிய எழுத்து சொற்களில் சோதனை

ஆங்கிலத்தில் கேப்பிடல் லெட்டர்ஸ் என்று சொல்லப்படும் பெரிய எழுத்துக்களை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். வேர்ட் டாகுமெண்ட்டில் இவற்றில் எழுத்துப் பிழை உள்ளதா என சோதனை செய்யப்படுவதில்லை. இவற்றையும் ஸ்பெல்லிங் சோதனைக்கு உட்படுத்த கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் Spelling & Grammar என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இங்கு Ignore Words in UPPERCASE என்ற வரியின் முன் உள்ள செக்பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்களும் சோதனை செய்யப்படும். 


சரியான அளவில் டேபிள் செல்கள்

வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும் நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன் அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. பின் அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட ரூலரில் சென்று மவுஸ் இடது பக்கம் அழுத்தி இழுத்து மாற்றி அமைக்கிறோம். ரூலர் இருந்தாலும் கட்டம் ஒன்றின் அகலம் எவ்வளவு எனச் சரியாகத் தெரிவதில்லை.
இத்தனை அங்குல அளவில் தான் அல்லது சென்டிமீட்டர் அளவில் தான் ஒரு கட்டம் இருக்க வேண்டும் என நாம் மிகத் துல்லிதமாக அமைக்க முடிவதில்லை. அவ்வாறு அமைத்திட சிறப்பான வழி ஒன்று உள்ளது. அளவுடன் அமைக்க வேண்டிய கட்டத்தில் கர்சரை நிறுத்திவிட்டு பின் மவுஸின் முனையை ரூலரில் கிடைக்கும் கட்டங்களின் முனையில் கொண்டு செல்க. இப்போது வெறுமனே மவுஸினை இழுக்காமல் ஆல்ட் கீயை அழுத்துக. இப்போது அந்த கட்டம் எவ்வளவு அங்குல அகலத்தில் இருக்கிறது எனக் காட்டப்படும். இனி உங்களுக்குத் தேவையான அகல அளவு கிடைக்கும் வரை மவுஸை அழுத்தியபடி நகர்த்தி கட்டத்தினை அமைத்திடலாம்.


Monday 17 December, 2012

கேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது

பிரபலமான ஹோட்டல்களின் பெயர்களில் மின்னஞ்சல்களை அனுப்பி, அதில் தரப்பட்டிருக்கும் லிங்க் மூலம், கம்ப்யூட்டர் களைத் தாக்கும் கேமரூ எனப்படும் மால்வேர் இந்தியாவில் 1.89 சதவிகிதக் கம்ப்யூட்டர்களில் பரவி உள்ளதாக ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், அதிக அளவில் பயணங்களை மேற்கொள்பவர்கள், தங்கள் மெயில் லிஸ்ட்டில் இந்த மால்வேர் கொண்ட அஞ்சல் செய்திகளுக்கு பலியாகிறார்கள். இந்த மால்வேர், அஞ்சல்களில் உள்ள, தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது. இந்த மால்வேர் BKDR_ANDROM.P என்ற பைல் பெயரில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ட்ரெண்ட் மைக்ரோ இதற்கான பாதுகாப்பினைத் தருகிறது. மேலே குறிப்பிட்ட பைலைக் கண்டறிந்து அழிக்கிறது.

Copyrights: Dinamalar
 http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13356&ncat=4

உலகை அணைக்க உதவும் கரங்கள்

உங்களின் நண்பர்கள், உறவினர்கள் எங்கு இருந்தாலும் சரி, அவர்களுடன் நினைத்த நேரத்தில் டெக்ஸ்ட் மூலம், எந்தவிதக் கட்டணமும் இன்றி உரையாட விரும்புகிறீர்களா? நட்பின் பாலத்தை இறுக்கமாகப் பிணைக்க எந்த கயிறு நமக்கு இலவசமாகக் கிடைக்கும் என்று தேடுகிறீர்களா? உங்களுக்கு உதவத்தான் WhatsApp என்ற அப்ளிகேஷன் உள்ளது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தால் போதும். உங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் செய்தி அவர்களுக்குச் சென்றுவிடும். இதற்கு ஒரே ஒரு தேவை, உங்களிடமும், நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்களிடமும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள சாதனம் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். இன்றைய வழக்கம் போல, இணைய இணைப்பில் இரண்டு போன்களும் இருக்க வேண்டும்.
முதலில் உங்கள் ஆண்ட்ராய்ட் டேப்ளட் அல்லது ஸ்மார்ட் போன் என ஏதேனும் ஒரு சாதனத்தில், இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுண்லோட் செய்திடவும்.இதனை “Play Store” என்ற இணைய தள ஸ்டோர் மூலம் மேற்கொள்ளலாம். தேடல் தளம் ஒன்றின் மூலம் “WhatsApp” என்று டைப் செய்து, பட்டியலிடப்படும் தளங்களில் ஒன்றிலிருந்து இதனை டவுண்லோட் செய்திடவும்.
இந்த அப்ளிகேஷனுக்கான ஐகான் பச்சை நிற வண்ணத்தில், சித்திரக் கதையில், கதா பாத்திரங்கள் பேசும் குமிழ் போல, உள்ளாக ஒரு டெலிபோன் படத்துடன் இருக்கும். முதன் முதலில் நீங்கள், இந்த அப்ளிகேஷனை இயக்கத் தொடங்குகையில், உங்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும். அடுத்து, உங்கள் பெயர், உங்கள் நண்பர்களுக்கு எப்படிக் காட்டப்பட வேண்டும் எனக் கேட்டு, அதனையும் வாங்கிக் கொள்ளும். இதில் உங்கள் படம் அல்லது உங்களைக் காட்டும் நீங்கள் விரும்பும் படம் ஒன்றையும் அமைக்கலாம். இதனைப் பின்னொரு காலத்திலும் நீங்கள் மேற்கொள்ளலாம். அடுத்து, ஒரு காலியாக உள்ள பக்கம் “Chats” என்ற தலைப்பில் காட்டப்படும். இதன் நடுவே பென்சில் ஸ்கெட்ச் ஒன்று காட்டப்படும். இதுதான் உங்களுடைய முகப்புப் பக்கம் (homepage).
அடுத்து இந்த WhatsApp அப்ளிகேஷன், உங்கள் தொலைபேசியில் உள்ள எண்கள் உள்ள போன்களில், எதில் எல்லாம், இந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அவற்றைப் பட்டியலிடும். இதன் வலது மேலாக, லென்ஸ் மற்றும் பென்சில் படம் ஒன்று காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், உங்கள் Chats மூலம், நீங்கள் தேடலை மேற்கொள்ளலாம். உங்கள் நண்பர் எவருடனாவது, டெக்ஸ்ட் சேட்டிங் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால், திரையில் காட்டப்படும் அவரின் பெயர் மேலாகத் தொடவும். இது உடனேயே ஒரு அரட்டைப் பெட்டியைத் (‘chat box’) திறக்கும். இதில் செய்தி ஒன்றை நீங்கள் டைப் செய்து, உடன் அனுப்பலாம். மேலாக வலது பக்கம், ஒரு பேப்பர் கிளிப் படமும், ஸ்மைலி ஐகானும் காட்டப்படும். பேப்பர் கிளிப் ஐகானில் கிளிக் செய்து, ஏதேனும் போட்டோ, வீடியோ, ஆடியோ, இடம் மற்றும் பிறர் தொடர்பு தகவல்களை இணைத்து அனுப்பலாம்.
Gallery என்பதில் கிளிக் செய்தால், உங்கள் போனில் உள்ள காலரி திறக்கப்பட்டு, அதில் உள்ள படங்கள் காட்டப்படும். இந்த அப்ளிகேஷன் மூலம் எந்த படத்தை அனுப்ப விரும்புகிறீர்களோ, அந்த படத்தின் மீது கிளிக் செய்து, செய்தியுடன் இணைத்து அனுப்பலாம். அப்போதே, கேமராவினைத் திறந்து, போட்டோ எடுத்து, இணைத்து அனுப்பலாம். இதே போல வீடியோ பைல்களையும் அனுப்பலாம். அடுத்து வாய்ஸ் ரெகார்டரில் பதிவு செய்த ஆடியோ பைல்கள், அப்போது பதியப்படும் குரல் பைல், என எதனையும் இணைத்து அனுப்பலாம்.
அடுத்து, Location என்பதன் கீழ், நீங்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்களை அனுப்பலாம். இதனை உங்கள் நண்பருக்குத் தெரிவிப்பதன் மூலம், உலகின் எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனை, உங்கள் நண்பருக்குத் தெரியப்படுத்தலாம். அதற்கேற்ற வகையில் உங்கள் நண்பர் உங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்மைலி ஐகானில் கிளிக் செய்தால், பல எமோட்டிகான் எனப்படும் உணர்ச்சிப் படங்கள் பட்டியல் கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நீங்கள் எளிதில் பின்னர் தேர்வு செய்வதற்காக, அண்மையில் நீங்கள் பயன்படுத்திய (recent emoji) ஸ்மைலி ஐகான்கள் பட்டியலிடப்படும். இதில் காட்டப்படும் ஒவ்வொரு ஐகான் கிளிக்கிலும், ஐகான்கள் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கும்.
இந்த செயல்பாட்டின் போது, முந்தைய ஸ்கிரீன் செல்ல வேண்டும் என்று விரும்பினால், பேக் ஸ்பேஸ் கீயினை அழுத்தினால் போதும். உங்களிடம் ஆண்ட்ராய்ட் போன் இருந்து, இதுவரை நீங்கள் இதனைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், உடனே இந்த வசதியைப் பயன்படுத்தவும்.

Copyrights : Dinamalar
 http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13355&ncat=4

ரோமன் எண்கள் பெற

நாம் சில எண்களை ரோமன் எண்களாக எழுத வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக, V Std, Chapter VIII என எழுதுவோம். குறைந்த மதிப்பிலான எண்களுக்கு, ரோமன் எண்களை அமைக்கலாம். மிகப் பெரிய மதிப்பிலான எண்களுக்கு ரோமன் எண்களை எதிலிருந்து பெறுவது? அகராதியில் கூட அனைத்து எண்களையும் ரோமன் எண்களாக அமைக்கும் வழிகள் தரப்படவில்லை. இங்கு நமக்கு கூகுள் தேடு தளம் உதவுகிறது. எந்த எண்ணுக்கு ரோமன் எண் வேண்டுமோ, அந்த எண்ணை எழுதி “in Roman Numerals” என அமைத்தால் போதும். உடனே நாம் தந்த எண்ணுக்கான ரோமன் எண் தரப்படும்

Copyright : Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13359&ncat=4 

வேகமாக டாஸ்க் மேனேஜர் பெற

நம் வசத்திற்கு வராமல், இயங்கவும் செய்யாமல், மூடவும் முடியாமல், திரையில் அப்படியே உறைந்து நிற்கும் புரோகிராம்களை, மூடுவதற்கு விண்டோஸ் டாஸ்க் மானேஜர் உதவுகிறது. அத்துடன், கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள் எவை, மெமரி எந்த அளவிற்கு ஒவ்வொரு புரோகிராமாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதனை நமக்கு டாஸ்க் மேனேஜர் காட்டுகிறது. இந்த டாஸ்க் மானேஜரைப் பெற வழக்கமாக கண்ட்ரோல் + ஆல்ட்+ டெல் கீகளை அழுத்துவோம்.
இன்னும் வேகமாக டாஸ்க் மேனேஜர் பெற, சில வழிகள் உள்ளன. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பாப் அப் விண்டோவில், Task Manager என்பதில் கிளிக் செய்து பெறுவோம்.
இரண்டாவதாக, கண்ட்ரோல் + ஷிப்ட்+ எஸ்கேப் (Ctrl Key, Shift Key and Esc key) கீகளை அழுத்தினால், டாஸ்க் மேனேஜர் கிடைக்கும். நம் மவுஸ் சில நேரங்களில் நகர்ந்து செல்லாமல், கிளிக் செய்திடாமல் முரண்டு பிடிக்கும். அப்போது மேலே சொல்லப்பட்ட கீகள் நமக்கு உதவும்.


 Copyrights : Dinamalar

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13358&ncat=4

பலூன், பாப் அப், டூல் டிப்ஸ்

கம்ப்யூட்டர் திரையில் எல்லாமே டிப்ஸ் தான். இதில் பலூன், பாப் அப்,டூல் டிப்ஸ் என ஏன் சிலர் பிரித்துப் பார்க்கிறார்கள்? என்று ஒரு வாசகி கேள்வி கேட்டிருந்தார். இதே விஷயம் குறித்து இன்னும் சிலரும் கடிதங்களை அனுப்பி உள்ளனர். இந்த கட்டுரையில், இந்த டிப்ஸ்களுக்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இவை குறிப்பிடும் டிப்ஸ்களின் தன்மையில் வேறுபாடுகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.
ஒரு ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்கையில், அந்த ஐகான் பற்றியோ அல்லது அது பிரதிபலிக்கும் புரோகிராம் குறித்தோ காட்டப்படும், ஒவ்வொரு சிறிய டெக்ஸ்ட் அடங்கிய பெட்டியும், அந்த பெட்டியில் என்ன வகையான செய்தியாக இருந்தாலும், அதன் பெயர் ஸ்கிரீன் டிப்(screen tip)என்பதாகும். யாராவது ஒருவர், இது என்னுடைய ஐயப்பாடு தான், ஏன் அனைத்தையும் ஸ்கிரீன் டிப் என அழைக்க வேண்டும் என எண்ணி, இவை வேறுபடும் சிறிய தன்மையின் அடிப்படையில் புதிய பெயர் அளித்திருக்க வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக இங்கு பார்க்கலாம்.

பலூன் டிப்:

நோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள ஐகான் ஒன்றின் மீது கர்சரைக் கொண்டு செல்கையில், மேலாக எழும்பி வரும் “பலூன்” அல்லது நீர்க்குமிழி தோற்றத்தில் எழும் டிப்ஸ் அடங்கிய கட்டத்தினை இவ்வாறு கூறுகிறோம். இதில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, சிஸ்டத்தில் இந்த ஐகான் சார்பாக என்ன இயங்கிக் கொண்டுள்ளது என்று காட்டுகிறது. நெட்வொர்க் இணைப்பு நிலை, வால்யூம் அளவு போன்றவை இவை. இரண்டாவது வகை, அந்த ஐகான் சார்பாக இயங்கும் புரோகிராம் என்ன என்று காட்டும்.


பாப் அப் (விளக்க உரை) டிப்:

நம் மவுஸ் ஐகான் மீது செல்கையில் கிடைக்கும் சிறிய அளவிலான விளக்க உரையாகும். எ.கா: வேர்ட் டாகுமெண்ட், பாடல் கோப்பு போன்றவை. இவை டெஸ்க்டாப்பில் மட்டுமின்றி, மேலும் பல இடங்களிலும் கிடைக்கும். டாகுமெண்ட், படங்கள் என எங்கெல்லாம் விளக்கம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் கிடைக்கும்.

டூல் டிப்ஸ்:

ஸ்டார்ட் மெனுவின் வலது மூலையில் கிடைக்கும் டிப்ஸ் இவை. எந்த புரோகிராம், போல்டர், புரோகிராம் பெயர் ஆகியவற்றைத் தரும் டிப்ஸினை இந்த பெயர் கொண்டு அழைப்பார்கள். இந்த டிப்ஸ் மூலம், ஐகான் பிரதிபலிக்கும் இந்த டிப்ஸ்கள் தேவை இல்லை என யாராவது விரும்பினால், இவற்றை வராமல் செய்துவிடலாம். ஆனால், ஒவ்வொரு வகை டிப்ஸ் நிறுத்த, ஒரு செட்டிங்ஸ் செய்திட வேண்டும். எனவே அவை இங்கு தரப்படவில்லை. ஆனால், இந்த டிப்ஸ் என்ன வகையாக இருந்தாலும், அதனை ஸ்கிரீன் டிப் என அழைப்பதே சிறந்தது.

 Copyrights Dinamalar:

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13357&ncat=4 

Friday 14 December, 2012

இந்த வார டவுண்லோட் - விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு ஸ்டார்ட் 8



விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து தரப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வாங்கிவிட்டீர்களா? ஏற்கனவே ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து பழகிய உங்களுக்கு, அது இல்லாமல், கம்ப்யூட்டரை இயக்குவது சற்றுக் கடினமாக இருக்கலாம். சில வேளைகளில், இந்த சிஸ்டத்தை யார் கேட்டா? என்றெல்லாம் எரிச்சல் அடைவீர்கள். ஸ்டார்ட் பட்டன் இணைக்கலாம் என்று, அதற்கான அப்ளிகேஷனைத் தேடினால், ஐந்து டாலரிலிருந்து 50 டாலர் வரை கட்டணம் கேட்கும் இணைய தளங்களைக் காணலாம்.
இவற்றிலிருந்து விலகி, முற்றிலும் இலவசமாகவே, இதற்கான தீர்வைத் தரும் தளம் ஒன்று உண்டு. அதன் முகவரி http://www.classicstart8.com/.
இந்த தளத்தில் சென்று, இலவசமாக டவுண்லோட் செய்வதற்கான பட்டனைக் கிளிக் செய்தால், ClassicStart8 Setup.exe என்ற அப்ளிகேஷன் பைல் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகும். பின்னர், இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். உடனேயே, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கிய ஸ்டார்ட் பட்டன் மற்றும் அதன் செயல்பாடுகள், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கும். தொடர்ந்து அந்த ஸ்டார்ட் பட்டன், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இணைத்துத் தரப்பட்டுள்ளது போலவே செயல்படும். ஏற்கனவே நாம் பைல்களைக் கையாள ஸ்டார்ட் பட்டன் பயன்படுத்தியது போல இதனையும் பயன்படுத்தலாம்.

Copyright by Dinamalar:

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13256&ncat=4

இந்த வார இணைய தளம் - இணையதளம் சரியாக உள்ளதா?

சில நேரங்களில் நமக்கு மிகவும் பிடித்த, பிரியமான இணைய தளத்திற்கான புக்மார்க்கினை கிளிக் செய்து காத்திருப்போம். ஆனால், அந்த தளத்தைக் காட்ட இயலவில்லை என நமக்கு பிழைச் செய்தி கிடைக்கும். இன்டர்நெட் ஸ்பீட் சரியாக இல்லையோ என்ற எண்ணத்திலும், நாம் ஆசை ஆசையாகப் பார்க்க வேண்டிய தளப் பற்று காரணமாகவும், இணைய இணைப்பினைத் துண்டித்து, பின் மீண்டும் இணைத்து, அந்த தளத்தினைப் பார்க்க முயற்சிப்போம். அப்போது அதே பிழைச் செய்தி வரலாம். இப்போது என்ன பிரச்னை? பிரவுசரிலா? அப்படி என்றால், மற்ற தளங்களைப் பெற்றுக் காட்டுவதிலும் சிக்கல் இருக்க வேண்டுமே? இல்லையே!
ஒருவேளை அந்த தளத்தில் பிரச்னை இருக்குமா? அதனை எப்படி அறிவது? இதற்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளத்தில், ஓர் இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்தால், அந்த குறிப்பிட்ட இணைய தளம் சிக்கலில் இருப்பதால், கிடைக்கப்பெறாமல் உள்ளதா? அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கிறதா? என இந்த தளம் காட்டும். http://www.downforeveryoneorjustme.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்றால், நமக்கு தள முகவரிக்கான கட்டம் ஒன்று காட்டப்படும். மாறா நிலையில் அதில், google.com காட்டப்படும். அந்தக் கட்டம் சென்று, நீங்கள் சோதனை செய்திட விரும்பும் தளத்தின் முகவரியினை டைப் செய்திட வேண்டும். உடனேயே அந்த தளம் up இல் இருக்கிறதா அல்லது downஇல் இருக்கிறதா என நமக்குத் தகவல் காட்டப்படும். தளம் சரியாக இல்லை எனில் “It’s not just you! (Site’s Name Here) looks down from here!” என செய்தி கிடைக்கும். தளம் சரியாக இருப்பின், It’s just you. (Site’s Name Here) is up.” எனச் செய்தி கிடைக்கும்.

Copyrights by Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13255&ncat=4

ஆபத்தைத் தரும் பழைய பிரவுசர்கள்

குறிப்பிட்ட சில இணைய பயனாளர்கள் பயன்படுத்தும் இணைய பிரவுசர்கள், மிகப் பழையதாகவும், பழைய பதிப்புகளாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காஸ்பெர்ஸ்கி நிறுவனம், பன்னாட்டளவில் மேற்கொண்ட தங்கள் வாடிக்கையாளர்களின் பயன்பாடு குறித்த ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் 23% பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாக உள்ளன. ஏறத்தாழ பத்தில் ஒருவர் பழைய பதிப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பிரச்னைக்குரியதாகின்றன.
இவர்களில் 14.5% பேர், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பிற்கு முந்தைய பதிப்பினையே பயன்படுத்துகின்றனர். 8.5% பேர், மிகப் பழைய பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கின்றனர். 77% பயனாளர்கள், சோதனைப் பதிப்பு மற்றும் புதிய பதிப்பினைப் பயன்படுத்துகின்றனர்.
ஒரு பிரவுசரின் புதிய முழுமையான பதிப்பு வெளியான பின்னர், ஒரு மாதம் கழித்தே, அதனைப் பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். ஆனால், சைபர் உலகத்தினை தங்கள் மால்வேர் புரோகிராம்களால் ஆட்டிப் படைக்கும் ஹேக்கர்கள், புதிய பதிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, எந்த இடத்தின் தவறைத் தங்கள் நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர். அவற்றைப் பயன்படுத்தி தங்கள் நாச வேலைக்கு அடித்தளம் அமைக்கின்றனர்.
நிறுவனங்களில், அதன் ஊழியர்கள், புதிய பிரவுசருக்கு மாறுவதற்கு நிர்வாகத்தினர் அனுமதி அளிப்பதில்லை.
சில காலத்திற்குப் பின்னரே, மிகத் தயக்கத்துடன் அனுமதிக்கின்றனர். இது முற்றிலும் தவறான போக்காகும். இது போல பழைய பிரவுசர்களை நிறுவனங்கள் பயன்படுத்துவது, நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கும், அவற்றில் உள்ள விலை மதிப்பில்லா டேட்டா பைல்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும்.

Thursday 13 December, 2012

எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது

விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முடிவு காலத்திற்கு இன்னும் 500 நாட்கள் கூட இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், மிக அதிக காலம், 11 ஆண்டுகள், செயல்பட்ட எக்ஸ்பி சிஸ்டத்தின் பயன்பாடு முடக்கப்பட உள்ளது. வரும் 2014 ஏப்ரல் 8ல் இதற்கான இயக்க ஆதரவினை மைக்ரோசாப்ட் நிறுத்திக் கொள்ளும். மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் இணைய தளங்களில், இன்னும் எத்தனை நாட்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு இயக்க உதவி கிடைக்கும் என்று காட்டும் காலக் கடிகாரத்தை இயக்கி வருகின்றன. புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பயனாளர்களை வழி நடத்தும், பிரிட்டனைச் சேர்ந்த இச்ட்தீணிணிஞீ என்னும் நிறுவனம் தன் இணைய தளத்தில் (http://camwood.com/news/thecountdownstartstodaywith500daystogobusinessesmustpreparefortheendofxp/) இது போன்ற கடிகாரம் ஒன்றை இயக்கி வருகிறது.
மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கைவிடும் நாளன்று, அந்த சிஸ்டத்தினை 12 ஆண்டுகள் ஐந்து மாதங்கள் இயக்கி இருக்கும். இதற்கு முன்னர், விண்டோஸ் என்.டி. சிஸ்டத்தினை 11 ஆண்டுகள் 5 மாதங்கள் இயக்கி நிறுத்தியது.
எக்ஸ்பிக்கு அதிக நாள் தன் சப்போர்ட்டை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. இதற்குக் காரணம், எக்ஸ்பிக்குப் பின்னர் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விஸ்டா, பயனாளர்களிடையே பல்வேறு குறைபாடுகளால் எடுபடாமல் போனதுதான்.
சென்ற மாதம் வரை, எக்ஸ்பி பயன்படுத்தும் பயனாளர்கள், பன்னாட்டளவில் 40.7% ஆக இருந்து வந்தனர். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு, சென்ற ஆகஸ்ட் மாதம் தான், எக்ஸ்பி பயன்பாட்டினை முந்தியது. தற்போது இதன் பயனாளர்கள், 44.7% ஆக உள்ளனர். விஸ்டா பயன்படுத்துவோர் 5.8% மட்டுமே. ஏப்ரல் 2014 தான் இறுதி மாதமாக இருக்கும் என்று தொடர்ந்து மைக்ரோசாப்ட் எச்சரித்து வருகிறது. தன் வாடிக்கையாளர் அனைவரையும், விண்டோஸ் 7க்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்பட்ட பின்னரும், பல லட்சக்கணக்கானவர்கள், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத் துவார்கள் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 27% முதல் 29% வரை இருப்பார்கள் என்றும் கணக்கிட்டுள்ளனர். உங்கள் கம்ப்யூட்டரிலும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தின் இறுதி இயக்க நாள் குறித்த எச்சரிக்கை கடிகாரம் ஓட வேண்டும் என விரும்பினால், http://www.nestersoft.com/timeleft/ என்ற முகவரியில் இதற்கான கடிகார அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.