PaidVerts

Wednesday 26 December, 2012

விண்டோஸ் லைவ் மெஷ் மூடப்படுகிறது

பைல்களை ஒருங்கிணைத்து பாதுகாத்து தேக்கி வைக்கும் சேவையினை கடந்த 2008 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் மெஷ் (Windows Live Mesh) என்ற பெயரில் தொடங்கியது. இது Live Mesh, Windows Live Sync, and Windows Live FolderShare எனவும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கால கட்டத்தில், இந்த சேவையினை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துவதாக அறிவித்திருந்தது. பைல்களை நம் சாதனங்களில் இல்லாமல், ரிமோட் இயக்கத்தில் சேமித்து, தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தக் கொடுத்த வசதிகளில், விண்டோஸ் லைவ் மெஷ் முதலிடம் பெற்றிருந்தது. ஆனால், பின்னர், மைக்ரோசாப்ட் பல்வேறு வசதிகளை அளிக்க முற்படுகையில், ஸ்கை ட்ரைவ் என்ற இன்னொரு கட்டமைப்பினை ஏற்படுத்தியது. லைவ் மெஷ் மூலம் தந்து வந்த வசதிகளை இன்னும் கூடுதல் எளிமையுடன் தர முடியும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. தற்போது லைவ் மெஷ் வசதிகள் அனைத்தையும் ஸ்கை ட்ரைவில் தருவதனால், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஸ்கை ட்ரைவிற்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது. வரும் பிப்ரவரி 13 முதல் லைவ் மெஷ் வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும்,எந்த வித சப்போர்ட்டும் தரப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.லைவ் மெஷ் பயன்படுத்திய அனைவருக்கும் இது குறித்து தனித்தனியே மெயில் மெசேஜ் அனுப்பி, மைக்ரோசாப்ட் தான் எடுத்த முடிவினை அறிவித்தது. தற்போது 25,000 பேருக்கும் குறைவாகவே விண்டோஸ் லைவ் மெஷ் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்கை ட்ரைவ் வசதியினை 20 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
லைவ் மெஷ் மூலம், அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை தூரத்தில் இருந்து இயக்கும் வசதியைப் பெற்றிருந்தனர். ஆனால், ஸ்கை ட்ரைவில் அந்த வசதியினை மைக்ரோசாப்ட் தரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வசதியினை தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்பினை தான் வழங்கும் ரிமோட் டெஸ்க் டாப் தொடர்பினைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், லைவ் மெஷ் வாடிக்கையாளர்கள் இதனை விரும்பவில்லை.

Copyrights : Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13456&ncat=4 

Friday 21 December, 2012

குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க

வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி: மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.

Copyrights : Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13370&ncat=4 

விண்டோஸ் 8க்கான விண்ஸிப்

1991 ஆம் ஆண்டு வெளியானது முதல், விண்ஸிப் பயன்பாடு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்புவதற்கும், விரித்துப் படிப்பதற்கும், விண்ஸிப் அப்ளிகேஷன்கள் பெரும் பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே நிறுவனம், விண்ஸிப் சார்ந்து ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட் (ZipShare, ZipSend) ஆகிய சேவைகளையும் வழங்குகிறது. iOS மற்றும் Android சிஸ்டங்களுக்கான விண்ஸிப் வெளியான நிலையில், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்குமான விண்ஸிப் வெளியாகியுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென வெளியாகியுள்ள பைல்களைக் கையாளும் முதல் அப்ளிகேஷன் இதுதான். பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்பவும், விரித்துச் செயல்படுத்தவும் இது உதவுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கேற்ப, தொடு திரை செயல்பாட்டில் இயங்குகிறது. 128 அல்லது 256 பிட் ஏ.இ.எஸ். என்கிரிப்ஷன் தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பேஸ்புக் சமூக இணைய தளத்திற்கான பைல் ஷேர் பயன்பாட்டிற்கு ZipShare உதவுகிறது. மிகப் பெரிய பைல்களை அனுப்ப ZipSend உதவுகிறது. மேலதிகத் தகவல்களுக்கு http://www.winzip.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Copyrights : Dinamalar
 http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13367&ncat=4

ஆப்பிள் சாதனங்களில் தமிழ்

விண்டோஸ் பயன்படுத்தப்படும் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த பல வகை எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல ட்ரைவர் தொகுப்புகளும் உள்ளன. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களான மேக் கம்ப்யூட்டர், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் தமிழ் பயன்படுத்த, யாரும் அவ்வளவாக முயற்சி எடுக்கவில்லை. இந்த வகையில் கம்ப்யூட்டரில் வெகு காலமாக தமிழைப் பயன்படுத்துவதில் ஆய்வு மேற்கொண்டு வரும், மலேசியாவைச் சேர்ந்த முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன், மொபைல் போன் மற்றும் ஐ பேட் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த "செல்லினம்' என்ற ஒரு தமிழ் மென் பொருளை உருவாக்கித் தந்துள்ளார்.
இவரே 1994 ஆம் ஆண்டு வாக்கில், விண்டோஸ் சாதனங்களில் பயன்படுத்த முரசு அஞ்சல் என்னும் மென்பொருளை உருவாக்கி,
உலகெங்கும் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் தன் இணைய தளத்தில் தந்தார். இதில் என்ன சிறப்பு எனில், தமிழுக்கென இவர் தரும் அனைத்து மென்பொருள் தொகுப்புகளும், எழுத்துரு கோப்புகளும் முற்றிலும் இலவசமாகவே தரப்பட்டு வருகின்றன. தமிழ் மொழிக்குத் தன் சேவையாகவே இதனைக் கருதுகிறார். ஆப்பிள் சாதனங்களுக்கான தமிழ் தெரிந்து கொள்ளும் முன், தமிழ் மொழி ஏன் மிகத் தாமதமாகவே கம்ப்யூட்டரில் செயல்படுத்தப்பட்டது எனப் பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் பயன்பாடு தொடங்கிய காலத்திலிருந்து, ஆங்கிலம், அதுவும் அமெரிக்க ஆங்கிலமே அதன் மொழியாக இருந்து வந்தது. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு, ஆங்கிலம் அல்லா மற்ற மொழிகளும், கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய கட்டாயத்தினைக் கொண்டு வந்தன. இதனை அடுத்து, ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கூடப் பயன்படுத்தாத நாடுகளின் மொழிகள், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சீனா, ஜப்பான், கொரியா மற்றும் அரபு நாடுகளின் மொழிகள், கம்ப்யூட்டரில் இடம் பெற்றன.
இந்தியாவில் பெர்சனல் கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்தியவர்கள், ஆங்கில மொழிப் பயன்பாட்டில் சிறப்பாக இயங்கியதால், மாநில மொழிகள் தேவை முதல் கட்டத்தில் இல்லாமல் இருந்தது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் போல, அரசு, நம் மொழிகள் கட்டாயமாக கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றவில்லை.
1985 ஆம் ஆண்டுக்குப் பின்னரே, ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்தன. இந்திய மாநில மொழிகள், 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னரே செம்மைப் படுத்தப்பட்டன. பல்வேறு காரணங்களால், தமிழ் இடம் பெறுவதில் குழப்பங்கள் ஏற்பட்டன. கம்ப்யூட்டர் வல்லுநரான தமிழர்கள், அவரவர் எண்ணப்படி பலவகைகளில் தமிழ் மொழி பயன்பாட்டினைக் கொண்டு வந்தனர். இன்று தமிழ் மொழி பயன்பாடு, யூனிகோட் என்ற வகையில், ஒருமுகப்படுத்தப்பட்ட பின்னரும், சில சொந்த காரணங்களுக்காக, தமிழ் இன்னும் பல முகங்களில் கம்ப்யூட்டரில் இடம் பெற்று வருகிறது. இது சாதாரணப் பயனாளர், எளிமையாகத் தமிழைப் பயன்படுத்தத் தடையாக உள்ளது. இந்தக் குழப்பம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல இயலவில்லை.
தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் பயன்படுத்த மெல்லினம் அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. தமிழில் மெல்லினம், வல்லினம் மற்றும் இடையினம் என மெய்யெழுத்துக்கள் பிரிவிற்குப் பெயர்கள் இருப்பதைப் போல, டிஜிட்டல் தமிழை, குறிப்பாக மொபைல் சாதனங்களுக்கான தமிழை, மெல்லினம் என, இதனைத் தயாரித்தவர் பெயரிட்டுள்ளார்.
மொபைல் போனில் தமிழ் என்றவுடன், நமக்கு எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திதான் நினைவுக்கு வரும். மொபைலில் தமிழ் பெற, அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இருவருமே, தமிழ் மென்பொருளைப் பதிந்து வைத்திருக்க வேண்டும். செல்லினம் ஆப்பிள் சாதனங்களில் இயங்க, ஐ.ஓ.எஸ்.4 (iOS4) ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும். இது இல்லாதவர்கள், ஐ போன் 3ஜி, ஐபோன் 3ஜி எஸ் மற்றும் ஐபாட் டச் வைத்திருப்பவர்கள், இலவசமாகவே இதனை அப்கிரேட் செய்து கொள்ளலாம். http://www.apple.com/ iphone/softwareupdate/ என்ற முகவரியில் உள்ள தளத்தில், இதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன்படி, ஐட்யூன்ஸ் சாப்ட்வேர் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து, அதற்கான அக்கவுண்டினைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், கீழே உள்ள லிங்க் நமக்குத் திறக்கப்பட்டு, செல்லினம் மென்பொருள் கிடைக்கும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்த பின்னர், http://www.iphoneappshome. com/sellinamiphone337936766.html என்ற ஆப்பிள் நிறுவன இணையதளத்திற்குச் சென்று, செல்லினம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, பதிந்து கொள்ளலாம்.
http://download. cnet.com/Sellinam/300012941_475091250.html என்ற முகவரியிலும் இந்த மென்பொருள் கிடைப்பதாகக் கூகுள் தேடுதளம் தகவல் தரும். இங்கு சென்றாலும், முதலில் சொல்லப்பட்ட ஆப்பிள் இணைய தளத்திற்குத் தான் நாம் அழைத்துச் செல்லப்படுவோம். இந்த மென்பொருளை, ஆப்பிள் சாதனங்களில் பதிவதும் எளிதே. தற்போது செல்லினம் பதிப்பு 3.0 கிடைக்கிறது. பைலின் அளவு 1.7 எம்.பி. இதனை இறக்கிப் பதிந்து பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை. இதனைப் பயன்படுத்தும் வழிகளை http://www.ucsc.cmb.ac.lk/ltrl/projects/TamilSMS/html/usermanual.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியலாம். செல்லினம் மென்பொருளுக்கென இயங்கும் தளத்திலும் (http://sellinam.com/) வேண்டிய தகவல்கள் கிடைக்கின்றன.
செல்லினம் மூலம், நாம் தமிழில் செய்திகளை அமைத்து அனுப்பலாம். இதில் அமைக்கப்பட்ட செய்திகளை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களிலும் அமைக்கலாம். போனடிக் எனப்படும் (ஆங்கில) ஒலி அடிப்படையில் இதன் கீ போர்டு இயங்குகிறது. இதனை பதிந்து வைத்திருந்தால், சில நூல்களையும், இலக்கியங்களையும் படிக்கலாம்.
செல்லினம் தவிர, தமிழர்களிடையே பிரபலமான, ஆங்கிலம்- தமிழ், லிப்கோ அகராதியும், ஆப்பிள் மொபைல் சாதனங்களில் பயன்படும் வகையில் தரப்படுகிறது.ஆனால், இதனைப் பெற 5 டாலர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனையும் ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளத்தில், http://itunes.apple.com/ app/lifcosellinamtamildictionary/id391740615?mt=8 என்ற முகவரியில் பெறலாம். இந்த அகராதியில், சொற்களைத் தேடிப் பெரும் வசதி தரப்பட்டுள்ளது.

Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13366&ncat=4

Tuesday 18 December, 2012

இந்த வார இணையதளம் - உலக காரட் அருங்காட்சியகம்

உடம்பிற்கு நல்லது, இரத்த ஓட்டத்தினைச் சீரமைக்கும் என்றெல்லாம் சொல்லி, நமக்குச் சிறு வயதிலிருந்து காரட் கொடுத்து நம் பெற்றோர் வளர்த்திருப்பார்கள். (சில வேளைகளில் அதிக விலை விற்றால், இரத்த ஓட்டத்தினை எகிறவும் வைக்கும்). இந்த காரட் எத்தகையது, எத்தனை வகை காரட் உள்ளது, இதன் பூர்விகம் என்ன, இவற்றிற்கான விதைகள் எங்கிருந்து எப்படி வந்தன போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உலக காரட் அருங்காட்சியம் ஒன்று இணையத்தில் இயங்கி வருகிறது. இதன் முகவரி http://www.carrotmuseum.co.uk/.
இதில் நுழைந்து பார்த்தவுடன் காரட் குறித்து நமக்கு அளிக்கப்படும் தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. இந்த இணைய தளத்தில், Start Your Tour என்ற பகுதியில் இருந்து தொடங்கினால், காரட் எப்படி எல்லாம் வளர்க்கப்பட்டது என்ற பழங்காலத் தகவல் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
அடுத்ததாக, காரட் வண்ணங்கள் என்ற பிரிவு. காரட் எப்போதும் ஒன்று அல்லது இரண்டு வண்ணங்களில் தான் இருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு, இதன் வண்ணங்கள் நமக்கு புதியவையாய் கிடைக்கின்றன. இவற்றோடு, காரட் நம் உடம்பிற்கு என்ன சத்துவகையைத் தரும், காரட் கொண்டு தயாரிக்கப் படக் கூடிய உணவிற்கான சமையல் குறிப்பு ஆகியவை கிடைக்கின்றன. இப்படியே, பல்வேறு பிரிவுகளில் தகவல்களைத் தந்து ஆச்சரியம் தரும் இந்த தளத்தை ஒருமுறையேனும் பார்த்துவிடுங்கள்.


Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13364&ncat=4

1.6 கோடி சாம்சங் கம்ப்யூட்டர்கள்

இந்த ஆண்டில், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்பட்ட, ஒரு கோடியே 60 லட்சம், சாம்சங் டேப்ளட் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர்களை, இந்தியாவிற்கு விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன துணைத் தலைவர், ஜின் பார்க் அறிவித்துள்ளார். சாம்சங் தொடுதிரையுடன் கூடிய அல்ட்ரா புக் கம்ப்யூட்டரினை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது. ATIV Smart PC and ATIV Smart PC Pro Series 5 Ultra Touch ஆகியவை மற்ற கம்ப்யூட்டர்களாகும். இவை அனைத்தும் விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களாகும்.
Ativ Smart PC and Ativ Smart PC Pro ஆகியவற்றில், பட்டன் ஒன்றை அழுத்துவதன் மூலம், நோட்புக் பெர்சனல் கம்ப்யூட்டராக இருக்கும் இவற்றை, டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர் சாதனமாக மாற்றலாம். இவற்றில் 11.6 அங்குல அகலத்தில் திரை தரப்பட்டுள்ளது. இவற்றின் தடிமன் முறையே, 9.9.மிமீ மற்றும் 11.9 மிமீ. ஆக உள்ளது. Ativ Smart PC ரூ.75,490 என விலையிடப் பட்டுள்ளது. Ativ Smart PC விலை ரூ.53,990.
5 Ultra Touch வரிசையில் வந்துள்ள விண்டோஸ் 8, சாம்சங் நோட்புக் கம்ப்யூட்டர்கள், தொடுதிரை கொண்ட சாம்சங் நிறுவன முதல் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்களாகும். இதன் திரை, மல்ட்டி டச் வசதி கொண்டு, 13.3 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையான அளவில் எச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி 3 போர்ட் ஒன்று மற்றும் யு.எஸ்.பி 2 வகை போர்ட் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. மல்ட்டி எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஈதர்நெட் போர்ட், 1.3 மெகா பிக்ஸெல் இணைய கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.64,990.

Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13363&ncat=4

எக்ஸெல் தொகுப்பில் ரோமன் எண்கள்

சில வேளைகளில், வழக்கமான எண்களுக்குப் பதிலாக, ரோமன் எண்களை (எ.கா. VIII) நாம் பயன்படுத்த விரும்புவோம். அனைத்து எண்களுக்கும் நாம் ரோமன் எண்ணை நினைவில் வைத்து பயன்படுத்த முடியாது. எக்ஸெல் தொகுப்பில் இதற்கென சிறிய பார்முலா ஒன்றைக் கொடுத்தால், அது தானாகவே ரோமன் எண்ணை அமைத்துக் கொள்கிறது. அந்த பார்முலா =ROMAN(123). இதில் 123 என்ற இடத்தில், நாம் பயன்படுத்த விரும்பும் ரோமன் எண்ணுக்கான வழக்கமான எண்ணை அமைத்துவிடலாம். இந்த இடத்தில் 1 முதல் 3,999 வரை பயன்படுத்தலாம். (இந்த ரேஞ்சுக்கு மேலாக ரோமானியர்கள் எண்களைப் பயன்படுத்தவில்லையா எனத் தெரியவில்லை) ரோமன் எண்கள் டெக்ஸ்ட்டாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. எனவே இதனை எந்த கால்குலேஷனிலும் பயன்படுத்த முடியாது.